இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 1, 2015

காதல் சாம்ராஜ்யம்.....


காதல் ஊற்று
ஆறாய்ப் பெருக்கெடுத்து
கன்னியவளின் தரிசனங்கூட
விண்ணைக் கடந்த மகிழ்வெனக்கு....

அவளின் ஓரக்கண் பார்வையும் 
ஒளிந்து மறைந்த சாடலும் 
எனைத் தொலைத்து - அவளைத் 
தொடர்ந்திடச் செய்கிறது....

என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது 
காதல் சாம்ராஜ்யமொன்று 
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....

என் தியாகம் நீ புரிந்து 
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு 
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...

ஏற்றுக் கொள்வாயா....?
ஏழனம் செய்வாயா......?
சீக்கிரமொரு பதில்தந்து 
சீராயொரு வாழ்வளித்திடு.....
 


முற்றிலும் கற்பனையே..............தொடரும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...